தமிழ்ப்புனல்

என் சிந்தனைகளைத் தாங்கி நிற்கும் சீரிய தமிழ்ப் பூ !

திங்கள், 26 ஜூலை, 2021

வேண்டாமே வெள்ளைச் சர்க்கரை !

 

எச்சரிக்கை !!!

 

ஐயா தயவு செய்து இந்த நஞ்சினை (விஷத்தை) நீங்களும் உங்கள் குழந்தைகளும் உண்ணாதீர்கள்;  மன்னிக்கவும் யாரும் உண்ண வேண்டாம்;  நாய்க்குக் கூடக் கொடுக்க வேண்டாம்.

 

ஏனெனில்  வெள்ளைச் சர்க்கரை (SUGAR) என்பது மெல்ல மெல்ல நம்மைக் கொல்லும் ஒரு நச்சுப் பொருள் (Sugar  is a slow poison) .

 

உங்கள் சட்டைக் கழுத்துப் பட்டியில் (காலரில்) உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் வெள்ளைச் சர்க்கரையை (சீனியை)  எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும்.

 

ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த வெள்ளைச் சர்க்கரையை (சீனியை)  சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

 

இனிப்பை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும்முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது.

 

பதார்த்தத்தில் தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.இந்த வெள்ளைச் சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

 

வெள்ளைச் சர்க்கரையை  (சீனியை)  தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன என்று பாப்போம் .

 

(01) கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளீச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை திரவ  பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள். 

 

(02). பிழிந்த கரும்புச் சாறு 60 டிகிரி சென்டிகிரேட் முதல் 70 டிகிரி சென்டிகிரெட்வரை சூடு படுத்தப்படுகிறது.  அதில்  பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலக்கப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

 

(03). இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயுவைச்  செலுத்துகிறார்கள்.

 

(04)  கொதிகலனில் உள்ள கரும்புச் சாற்றை 102 டிகிரி சென்டிகிரேட்  வரை சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழக்கச் செய்து ,  சுண்ணாம்பு சத்து மட்டும் அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

 

(05) அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் விட்டு மண், சக்கை போன்ற பொருள்களைப் பிரித்து எடுக்கிறார்கள்; இப்போது  தெளிந்த சாறு கிடைக்கிறது.

 

(06)  தெளிகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா ஆகியவற்றைச் சேர்த்து அடர்த்தி மிகுந்த கருப்பஞ் சாறு தயாரிக்கப்படுகிறது.

 

(07) மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க, கருப்பஞ்சாறு  டிக நிலையை அடைந்து  வெள்ளைச் சர்க்கரையாக (சீனியாக) வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

 

(08)  இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

 

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனியைச் சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர் டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது. இதனால் தான் வெள்ளைச் சர்க்கரையின் நிறம் சற்று மஞ்சள் நிறத்துக்கு மாறிவிடுகிறது.

 

குடலில் புண் (அல்சர்) ஏற்படுதல், பல் வலி, பல்சொத்தை,  சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய்,  நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அனைத்துக்கும் வெள்ளைச் சர்க்கரை தான்  முதன்மைக்  காரணியாக அமைகின்றது.

 

ஆலைகளில் தயாராகும் வெள்ளைச் சர்க்கரை  (சீனி) சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

 

டாக்டர் டேவிட் ரூபன் என்ற ஊட்டச்சத்து நிபுணர் சர்க்கரையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். சர்க்கரையின் உண்மைப் பெயர் சுக்ரோஸ். அதன் இரசாயன மூலக்கூறு C12 H22 O11. இந்த சர்க்கரையில் 12 கார்பன் அணு (atom), 22 ஹைட்ரஜன் அணு, 11 ஆக்ஸிஜன் அணுக்கள்  உள்ள. இதனைத் தவிர்த்து வேறு எதுவும் சர்க்கரையில் கிடையாது.

 

போதையுணர்வு ஊட்டும் கொகைனின் இரசாயன மூலக்கூறு C17 H21 NO4. இரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடு கிடையாது. சர்க்கரையில் நைட்ரஜன் அணு மட்டும் இல்லை என்பதே சிறிய வேறுபாடு.

 

நண்பர்களே வெள்ளைச் சர்க்கரை பற்றிய உண்மை நிலையை  இன்றய ஊடகங்கள் வெளிப்படுத்துவதில்லை;  உண்மை மறைக்கப்படும்  சதி எனவும் கூறலாம். சர்க்கரை ஆலை அதிபர்களால் நம்  மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை நம்மை ஆளும் அரசுகள் கண்டு கொள்வதில்லை ! நாமாவது முடிந்தவரை விழிப்புணர்வு ஏற்படுத்துவோமே !

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

த.அழகேசன்,

ஆட்சியர்,

தமிழ்ப் புனல் வலைப்பூ,

[தி.ஆ: 2052, கடகம் (ஆடி) 10]

{26-07-2021}

------------------------------------------------------------------------------------